Tuesday, September 25, 2012

மயில்சாமி அண்ணாதுரை ISRO சொன்ன கதை

ஒரு நாள் அழகிய பூங்காவிற்க்கு சென்றார் நமது அண்ணதுரை அப்போது அந்த பூங்காவிற்க்கு ஒரு மான், ஒரு வெட்டுக்கிளி மற்றும் ஒரு தேன் குழவி வந்தது

நடிகர் பார்த்தீபன் சொன்ன கதை


ஒரு நாள் ஐடி கம்பனியில் வேலை செய்யும் சிலர் ஸ்ரீரங்கம் சென்று சாமி தரிசனம் செய்வதர்க்காக சென்றனர் அப்போது அவர்கள் சென்ற நேரம் 12 மணி ஆனதால் பிரகாரத்தை மூடி விட்டனர். அடுத்து மாலை 4 மணிக்குதான் கோவில் நடை திறப்பு என்று கூறி விட்டனர். என்னடா வந்தும் சாமி கும்பிட முடியவில்லையே என்று வருந்தினர். அப்போது ஒரு முதியவர் அவர்கள் இருக்கும் காரின் அருகில் வந்து காரின் கதவை தட்டினார். அந்த காரில் இருந்த நபர்கள் அந்த முதியவரை விரட்டி விட்டனர். 

அந்த முதியவர் யார் என்றால்? 

சாச்சாத் அந்த கடவுள் தான் அவர்கள் முன் முதியவராக வந்தார்.

ஆபத்துக்கள்: 
அலச்சிய மனப்பான்மை
நம்பிக்கையின்மை
ஒருவரின் பெருமை தெரியாமல் குறைகூறல்

என்ன செய்ய வேண்டும்
பாஸிடிவ் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்

Sunday, September 23, 2012

விடா முயற்ச்சி

ஒரு நாள் ராமசாமி வேலை நிமித்தமாக தனக்கு கொடுத்த உணவை உண்ணாமல் ஒரு ஓரமாக வைத்துவிட்டு தனது எழுத்து வேலையை தொடர்ந்தான். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவன் உணவில் அதிக எறும்புகள் இருந்தன. அவனால் உணவை உண்ண முடியவில்லை. அவன் எப்பொழுதெல்லாம் கொஞ்சம் லேட்டாக சாப்பிட சென்றாலும் இதே தொல்லைதான். இதற்க்கு ஒரு முடிவு கட்ட எண்ணி சாப்பாட்டு தட்டை சுற்றி தண்ணீர் நிற்கும்படி ஒரு அமைப்பை செய்துவிட்டு நிம்மதியாக தனது வேலையை செய்ய சென்றான். சிறிது நேரம் ஆன பிறகு வந்து பார்த்த போது மீண்டும் உணவில் அதிக எறுப்புகள் இருப்பதை கண்டு அவனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எப்படி இந்த எறும்புகள் தண்ணீரை கடந்து வந்தது என்று. சரி ஒரு கை பார்த்து விடுவது என்று முடிவு செய்து அடுத்த நாள் உணவை அந்தரத்தில் தொங்கவிட்டான் அங்கேயும் இதே தொல்லைதான். சரி அவைகளுக்கு கொஞ்சம் உணவை தனியாக வைத்து விட்டால் அவை வராது என்று எண்ணி தனது உணவு தட்டினை சுற்றி சிறிது அளவு உணவினை வைத்தான். அப்போதும் ஒரு பகுதி வழியாக அந்த எறும்புகள் அவன் உணவை பதம் பார்த்தன. அப்ப இதற்க்கு ஒரு முடிவே இல்லையா என்று ஆழ்ந்து யோசித்தான் அவனுக்கு கிடைத்த விடை அவனுக்கு நிம்மதியை அளித்தது.

அது என்ன?

Friday, September 21, 2012

வாய்ப்பை தவறவிடுதல்

ஒரு நாள் தனது விவசாய வேலை நிமித்தமாக மிகவும் சீக்கிரமாக சென்றான் ராமசாமி. அவன் சென்ற போது மிகவும் அதிகாலை என்பதால் இருட்டாக இருந்தது. சரி வெளிச்சம் வரும் வரை காத்திருப்போம் என்று தனது வயல்வெளிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு குளக்கரையில் அமர்ந்தான் ராமசாமி அப்போது அவன் அருகில் ஒரு சாக்கு மூட்டை நிறைய சிறு சிறு கற்கள் போன்று இருப்பதை கண்டான். அவன் ஒவ்வோரு கல்லாக எடுத்து குளத்தினுல் எறிந்தான். நேரம் ஆக ஆக அந்த சாக்கு மூட்டையில் இருந்த அனைத்து கல்லையும் எறிவதற்கும் சூரியன் உதிப்பதற்க்கும் சரியாக இருந்தது. கடைசியில் அவன் கையில் ஒரே ஒரு கல்மட்டும் இருந்தது வெள்ச்சத்தில் அந்த கல் மின்னியது. அப்போது தான் அவனுக்கு தெரிந்தது அது ஒரு விலைமதிப்பில்லாத மரகத கல் என்று.

ஆபத்துக்கள்:
அலச்சிய மனப்பான்மை
தேவையில்லாத செயலை செய்தல்
தேவையில்லாதவற்றை பேசுதல்
ஒருவரின் உண்மையான குணம் தெரியாமல் குறைகூறல்

என்ன செய்ய வேண்டும்
புரிந்து கொள்ள வேண்டும்
தேவையானதை மட்டும் பேசவோ அல்லது செய்யவோ வேண்டும்

Monday, September 10, 2012

பொறாமை

அன்று மாணவ தலைவனை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு.
ராமசாமியும் கண்ணனும் தலைவருக்கான போட்டியில் இருந்தனர். ராமசாமி நன்றாக படிக்கும் மாணவன் ஆனால் கண்ணன் சுமாராக படிக்கும் மாணவன் ஆனால் அனைவருடனும் நல்லா பழகும் குணமுடயவன். வகுப்பில் உள்ள மாணவர்கள் மொத்தம் 40. வாக்குபதிவில் வெற்றி கண்ணனுக்கே. ராமசமியை அவன் ஆசிரியர் உட்பட அனைத்து மாணவர்களும் கேலி செய்தனர். இதனால் மனம் உடைந்த ராமசாமி அனைத்து மாணவர்களின் மீதும் வெறுப்பு கொண்டான். கண்ணன் மீது பொறாமை கொண்டான்.

ராமசாமியின் வாழ்வில் இது மிகவும் கடினமாக இருந்த காலம். யாரைகண்டாலும் வெறுப்பு இதனால் அவன் தனிமையை நாடினான். தனிமையில் பல்வேறு எண்ணங்கள் அவன் மனத்திரையில் ஒடின. பெரும்பாலும் கண்ணன் மீது இருந்த பொறாமை உணர்வே. அதனால் அவன் கண்ணனை பழிவாங்க எண்ணினான். அதற்க்கு அவன் செய்த காரியம் மிகவும் மோசமான ஒன்றாகும். அவன் தன்னுடைய வீட்ற்கு அருகில் இருந்த பொது தொலைபேசி நிலயத்தில் இருந்து தன்னுடைய பள்ளிக்கு போன் செய்தான். பொனை மறுமுனையில் எடுத்த முதல்வர் வணக்கம் சொல்லுங்க என்றார்.

உங்க பள்ளியில் வெடிகுண்டு இன்னும் அரைமணி நேரதில் வெடிக்கும் முடிந்தால் ஓடிவிடு என்று கூறி போனை வைத்துவிட்டான்.

இதைக்கேட்ட முதல்வருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் படபடப்புடம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தார். அவர்முகம் வெளிரி காணப்பட்டது. இதை கண்ட மற்ற ஆசிரியர்கள் முதல்வரை வினவினர். அவர்களிடம் நடந்ததை கூறி அனைத்து மாணவர்களையும் வகுப்பைவிட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் கூறினார். பதறி அடித்துக் கொண்டு அனைத்து மாணவர்களும் வகுப்பைவிட்டு வெளியேறினர். அப்போது ஒரு மாணவன் கீழே தவறி விழுந்து விட்டான். அவனுக்கு காலில் நல்ல காயம். சிறிது நேரத்தில் மணவ்ர்களின் பெற்றோரும் அங்கு குவிந்தனர்.அந்த இடம் முழுவதும் ஒரே பதற்றமாக காணப்பட்டது. சில பெற்றோர் மயங்கி விழுந்து விட்டனர்.

ஆபத்துக்கள்:
(ராமசாமிக்கு)
பிறர் துன்பத்தில் இன்புரும் குணம் வளர்தல் 
சமூக வெறுப்பு
சமூக குற்றம் செய்யும் எண்ணம்

என்ன செய்ய வேண்டும்/ என்ன செய்ய  கூடாது : 
பலர் மத்தியில் கேலி செய்யக் கூடாது
துணை தலைவர் பொறுப்பு கொடுக்க வேண்டும்.
மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையை நல்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.






Friday, August 31, 2012

தர்ம அடி

தர்ம அடி
ஒரு நாள் தனது வழக்கமான வேளை நிமித்தமாக ராமசாமி சாலையில் சென்று கொண்டு இருந்தான். அப்போது எதிரெ வந்த ஒரு ஆட்டோ அவன் காலின் மேல் ஏறி விட்டது. வலியினால் அந்த ஆட்டோகாரனை நோக்கி சென்சார் வார்தையால் திட்டிவிட்டான். 

உடனே அந்த் ஆட்டோ காரன் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு ராமசாமியை நோக்கி வந்து ஏண்ட ஆட்டோ போர பக்கம் நீ தவறா வ்ந்துட்டு என்னைய திட்டுறயா என்று கூறிவிட்டு ராமாசாமியை டபுல் சென்சார் அர்ச்சனையையும் பொழிந்து விட்டு ஒரு அடியும் அடித்து விட்டான். 

இதை சற்றும் எதிர்பாராத ராமசாமி அந்த ஆட்டோக்காரனை நடுக்கத்துடன் நீங்க தான் ஒன் வே பதையில் தவறா வந்திங்க ஆன என்னை அடிக்கிரிங்க நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட என்று சொன்னான். 

இதை கேட்ட அந்த ஆட்டோகாரன் இருட வர்ரேன் .... என்று கூறிவிட்டு தனது செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்து வரச்சொன்னான். 

சிறிது நேரத்தில் மேலும் சிலர் இரண்டு ஆட்டோக்களில் வந்தனர். அவர்களிடம் ஆட்டோகாரன் மச்சான் இவன் ராங்கா பேசுரான்டா என்றான்.
வந்தவர்களில் ஒருவன்
டேய் நீ எந்த ஏரியா டா?
உன் பேரு என்னடா?
உனக்கு அவ்வளவு திமிரா என்று சொன்னான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ராமசாமி நடந்தவற்றை கூறினான். அவர்கள் அவன் சொல்வதை கேட்டதாக தெரிய வில்லை. ராமசாமி ஒருவன் கன்னத்தில் அறைந்தான், உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு ராமசாமியை துவம்சம் செய்தனர். வலியினால் துடித்தான் ராமசாமி. சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.


ஆபத்துக்கள்:
(ராமசாமிக்கு)
மன உளச்சல்
தாழ்வு மனப்பான்மை
சமூக வெறுப்பு

என்ன செய்ய வேண்டும்:
துன்பத்தை பகிற்தல் வேண்டும்
ஆட்டோகாரர்களை மனதிரையில் கொண்டு வந்து அவர்களை சினிமாவில் காட்டுவதுபோல் அடித்து துவம்சம் செய்வது போன்று காண வேண்டும்.
நண்பர்கள் இதைவிட கொடுமையான நிகழ்வுகளை கூறி தேற்ற வேண்டும்.
மன்னிப்பவன் பெரியமனிதன் என்று கூறி தேற்ற வேண்டும்.
அந்த நிகழ்வினை மறக்க வேண்டும்.

கோபம்

கோபம்
ஒரு நாள் தன் மகனை கூட்டிக்கொண்டு ஞானியை கான சென்றார். அந்த தந்தை ஞானியிடம் .. தன் மகன் மிகவும் கோபம் கொள்வதாகவும் அதற்கு தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். 
அந்த பையனை பார்த்த ஞானி தன் அருகில் வருமாறு அழைத்தார். 
பின் அந்த பையனிடம் உனக்கு எப்போதெல்லம் கோபம் வருகின்றதோ அப்போதெல்லம் உன் வீட்டு சுவற்றில் ஒரு ஆணியை அறைந்து வைக்குமாறு   கூறினார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த சிறுவன் அந்த ஞானியை பார்க்க வந்தான். 
ஐயா என் அறையில் இருந்த சுவர் முழுவதும் ஆணியால் நிறம்பிவிட்டது என்றும் ஆனால் இப்போதெல்லம் நான் கோபம் கொள்வது இல்லை நான் என்ன செய்ய என்று கேட்டான். அதற்க்கு அந்த ஞானி நீ அமைதியாக இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு ஆணியை பிடிங்கி விடு என்றார். 

சரி என்று கூறிய அந்த சிறுவன் அங்கிருந்து சென்றான். மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு மிகவும் அமைதி நிறம்பியவனாக அந்த ஞானியை கான வ்ந்தான். அவன் ஞானியிடம் ஐயா நான் இப்போதெல்லம் கோபம் கொள்வதே இல்லை அதனால் எனது அறையில் இருந்த அனைத்து ஆணியையும் பிடிங்கிவிட்டேன் என்று கூறினான்.

இதை பொறுமையாக கேட்ட ஞானி அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு அவன் அறைக்கு சென்றார். அங்கு அந்த சிறுவனிடம் நீ இப்போதெல்லாம் கோபம் கொள்வதில்லை அனால் நீ கொபம் கொண்டதனால் உண்டான இந்த சிறு துளைகள் போன்ற வடுக்களை எப்படி போக்குவாய் என்றார். 

அப்போது தனது தவறை உணர்ந்த அந்த சிறுவன் மனம் வறுந்தினான்.

ஆபத்துக்கள்:
தவறான முடிவு எடுத்தல்
ப்கைமை உண்டாகுதல்
நரம்பு தளர்ச்சி
இருதய நோய்கள்

என்ன செய்ய வேண்டும்:
  1. தியானம்
  2. யோகா
  3. ஒரு தலையனையை எடுத்து எப்போதெல்லாம் கோபம் வருகின்றதோ அப்போதெல்லாம் அந்த தலையனையை நல்லா அடியுங்கள், துவைத்து எடுங்கள் (வெறும் கையால்). யார் மேல் கோபம் வருகின்றதொ அவரை உருவகம் செய்து கொள்ளுங்கள்.

Tuesday, August 28, 2012

அதிர்வு

வழக்கம்போல் தனது வேலையை செய்துகொண்டு இருந்தான் ராமசாமி. அப்போது அவனது மனைவி என்னங்க இன்னிக்காவது கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்று சொன்னபடி தனது உணவு தயாரிக்கும் வேலையில் மும்முரமானால். தனது மனைவி கூரியதை சிறிதும் காதில் போட்டுக்கொல்லாமல் தனது வண்டியை துடைத்து மெருகூட்டும் வேலையை செய்துகொண்டு இருந்தான்.

ராமசாமிக்கும் காந்தம்மாளுக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றது. திருமணமான புதிதில் நெற்றியும் குங்குமமும் போல இருந்த இவர்கள் இன்று.
எப்போதும் பேசிக்கொண்டோ அல்லது குறைபடுவதையே முழுவேலையாய் செய்யும் மனைவி. அலட்சியம் ஒன்றே கண்ணாக செயல்படும் கணவன். இத்தனைக்கும் இவர்களின் திருமணம் காதல் திருமணம் வேறு..

தனது அலுவலகதில் வேலை செய்யும் மயிலுவை கொஞ்ச நாளாகவே ராமுக்கு பிடித்துவிட்டது. அதனால் அவளுக்கு பிடித்த விசயங்களை அறிந்துகோள்வதில் அதீத ஆர்வம் காட்டுகின்றான்.

இன்று அவன் தனது வண்டியை அழகுபடுத்துவதும் கூட மயிலு சொல்லித்தான். அதாவது உங்க வண்டியகூட ஒழுங்கா வச்சிக்காம இப்படி தூசு படிஞ்சு இருக்கே...

தனது மனதை அலையவிட்ட ராமசாமி தனது மனைவியை பற்றி கண்டுகொல்வதே இல்லை.

மயிலைப் பற்றி .. நகரத்தில் பிறந்தவள் போல் இருந்தாலும் அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு கிராமத்தில் தான். எல்லோரிடத்திலும் சகசமாக பழகும் குணம் உடயவள்.

ராமசமியும் காந்தம்மாளும் ஏதோ கடனுக்காக பழகுகின்றனர்.

ஏன் கதல் திருமணம் செய்த அவர்கள் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்படி ஆர்வம் இன்றி ஒரு அலச்சியத்துடன் நடந்துகொள்கின்றனர். என்ற எண்ணம் நமது மனதில் ஓடலாம்? அல்லது சிலருக்கு இது நடைபெறலாம்.

ஆபத்துக்கள்:
பொய் கூறுதல்.
கள்ள காதல்
வாழ்க்கையில் பிடிப்பு இன்மை/வெறுப்பு

என்ன செய்ய வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் வெளியே சென்று வர வேண்டும்.
குடும்பத்துடன் ஒன்றாக ஒரு வேளையேனும் உணவு உட்கொள்ள வேண்டும்.
இறை வழிபாடு